சட்டவியல் : அமெரிக்க யதார்த்தவாத பிரிவு -அறிமுகம்

சட்டவியல் : அமெரிக்க யதார்த்தவாத பிரிவு -அறிமுகம்

அமெரிக்க யதார்த்தவாத பிரிவை சட்டவியலின் சிந்தனைப்பிரிவாக ஏற்பதில்குழப்பநிலை காணப்பட்டது. சட்ட அறிஞர் லெவிலின் சட்டம் தொடர்பாக ஆராயும் ஒருஇயக்கமென்றே(Movement) இதனை கூறினார். இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்அமெரிக்காவில் வளர்ச்சியடைய தொடங்கியது. இது புலனறிவாத குழாம் மற்றும்சமூகவியல் சிந்தனைப்பிரிவின் சேர்க்கையாகவே கருதப்படுகின்றது. அமெரிக்க யதார்த்தவாதிகளின் கருத்துப்படி சட்டமானது பாராளுமன்றத்தால்உருவாக்கப்பட்டதோ அல்லது சட்டஆவணத்தில் காணப்படுவதோ இல்லை. மாறாகநீதிபதிகளால் வழங்கப்படும் தீர்ப்புக்களிலிருந்தே சட்டம் உருவாகும் என்றஅடிப்படையிலேயே இவர்களின் கருத்துக்கள் அமைந்தன. சட்டமானது முறையானதர்க்கரீதியான, கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையாக இருப்பதை இவர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை. அனுபவ […]

சட்டவியல் : இயற்கை நீதி சட்ட சிந்தனைப்பிரிவு – அடிப்படை

இயற்கை சட்டமென்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டமல்ல. இது எழுத்த்pல்காணப்படாது. இது மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சட்டமாகும். சட்டமானதுவலிதானதாக இருப்பதற்காக அது இயற்கைச்சட்ட கொள்கைகளுக்கு அமைவானதாகஇருக்கவேண்டும் என்பது இயற்கைசட்டவியலாளர்களின் நிலைப்பாடாகும். இது சட்டத்தின் அடிப்படையாக தார்மீக கடமையையும் அனுபவ நீதியையும் உள்ளடக்கியது.ஆரம்பகால இயற்கை சட்டவிதிகள் கிரேக்க,ரோமானிய தத்துவாசிரியர்களால்வளர்த்தெடுக்கப்பட்டது. சோக்கிரட்டீஸ் மனிதர்களால் உருவாக்கப்படும் சட்டத்திற்குஎதிரான கருத்துக்களை முன்வைத்தார். உண்மையான நீதியையும் நியாயத்தையும்வழங்கக்கூடிய தத்துவாசிரிய அரசன் எனும் எண்ணக்கருவை உருவாக்கினார். அரிஸ்டோட்டில் இயற்கை நீதிக்கு ஆதரவு வழங்கியதுடன் அவை தொடர்ச்சியாகவளர்ச்சியடைய வேண்டும் என […]

கடந்தகால பயன் கொண்ட சட்டவாக்கமும் அரசியலமைப்பும்

பொதுச்சட்ட நாடுகளின் அரசியலமைப்புகள் பொதுவாக கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கத்தினை அனுமதிப்பதில்லை. உதாரணமாக அமெரிக்காவின் அரசியலமைப்பு உறுப்புரை 1 பிரிவு 9 வசனம் 3 மற்றும் பிரிவு 10 கடந்கால பயன் கொண்ட சட்டவாக்கத்தை தடுக்கின்றது. எனினும் வெஸ்ட் மினிஸ்டர் முறையினை பின்பற்றும் நாடுகளில் கடந்தகால பயன்கொண்ட சட்டவாக்கம் சாத்தியமாகின்றது ஏனெனில் பிரித்தானியா போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மை இதற்கான பிரதான காரணமாகும். பொதுவாக மனித உரிமைகளை உள்ளீர்த்துள்ள நாடுகளின் அரசியலமைப்புகள் இதனை மறுப்பதினை காணலாம். UDHR உறுப்புரை […]

நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி

உரோமன் சட்டத்தில் அறிமுகமாகி ஆங்கிலச்சட்டம் வரை “வாங்குபவர் கவனமாயிரு” (Caveat Emptor Doctrine)என்ற கோட்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதன்படி கொள்வனவாளர் பொருளொன்றை வாங்கியபின் அதனுடன் தொடர்பான சேதங்களுக்கான இழப்பீடுகளை மீளப்பெறமுடியாமல் இருந்தது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு எண்ணக்கரு படிப்படியாக வளர்ச்சியடைந்து அவை தொடர்பான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அனேக பொருள் விற்பனை தொடர்பான நியதிச்சட்டங்களில் தரம், பொருத்தப்பாடு தொடர்பிலான குறைபாடுகள் உட்கிடையான நிபந்தனை மீறலாக கருதப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் பொருள் விற்பனை கட்டளைச்சட்டத்தின் பிரிவு […]

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 20.00

CONTACT US